என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது
Byமாலை மலர்10 Dec 2019 4:17 AM GMT
மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது. இதில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக கடந்த 16-ந் தேதி முதல் 29 -ந் தேதி வரை மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ரெயில் பாதையை சீரமைத்த பின்னர் 1-ந் தேதி வழக்கம்போல் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டு சென்றது இதனிடையே கல்லாறு- ஹில் குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மீண்டும் ஒரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் வரும் மலை ரெயில் மீண்டும் குன்னூருக்கு திருப்பி இயக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. ரெயில் பாதையில் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு-குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே 19 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து மீண்டும் 9-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.
ரெயில் பாதையை சீரமைப்பதற்காக கடந்த 2-ந் தேதி மேட்டுப்பாளையத்திலிருந்து பி.டி .ரெயிலில் கம்பரசர் மற்றும் பொக்லின் எந்திரங்கள் ஏற்றப்பட்டு மலைப்பாதையில் மண்சரிவு, பாறை உருண்டு விழுந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது மலை ரெயில் இருப்புபாதை பொறியாளர்கள் ஜெயராஜ், நாகராஜ் ஆகியோர் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் நேற்று மாலையுடன் முடிவடைந்தது .
சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்ததையொட்டி மலை ரெயில் போக்குவரத்து 8 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது வழக்கம்போல் காலை 7 .10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டுச் சென்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக கடந்த 16-ந் தேதி முதல் 29 -ந் தேதி வரை மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ரெயில் பாதையை சீரமைத்த பின்னர் 1-ந் தேதி வழக்கம்போல் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டு சென்றது இதனிடையே கல்லாறு- ஹில் குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மீண்டும் ஒரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் வரும் மலை ரெயில் மீண்டும் குன்னூருக்கு திருப்பி இயக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. ரெயில் பாதையில் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு-குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே 19 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து மீண்டும் 9-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.
ரெயில் பாதையை சீரமைப்பதற்காக கடந்த 2-ந் தேதி மேட்டுப்பாளையத்திலிருந்து பி.டி .ரெயிலில் கம்பரசர் மற்றும் பொக்லின் எந்திரங்கள் ஏற்றப்பட்டு மலைப்பாதையில் மண்சரிவு, பாறை உருண்டு விழுந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது மலை ரெயில் இருப்புபாதை பொறியாளர்கள் ஜெயராஜ், நாகராஜ் ஆகியோர் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் நேற்று மாலையுடன் முடிவடைந்தது .
சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்ததையொட்டி மலை ரெயில் போக்குவரத்து 8 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது வழக்கம்போல் காலை 7 .10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டுச் சென்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X