என் மலர்
செய்திகள்

பெண்ணாடம் பகுதியில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதையும், அதில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதையும் காணலாம்
கடலூர் மாவட்டத்தில் 3-வது நாளாக கொட்டி தீர்த்த கனமழை
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 47 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்து பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்துவருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மழை தொடர்ந்து பெய்து வந்தது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
மேலும் கடலூர் பகுதியில் உள்ள பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. மேலும் ஒருசில வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் கடலூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றினர். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம், அண்ணா விளையாட்டு மைதானம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வடக்கு பாளையங்கோட்டை, புதுப்பாளையம், நாச்சியார் பேட்டை, ஸ்ரீஆதிவராகநல்லூர், மதகளிர் மாணிக்கம், அம்புஜவள்ளிபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் சாலையில் சென்றனர்.
ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக அந்த பகுதியில் உள்ள குன்னத்துஏரி உள்பட 8 ஏரி குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெண்ணாடம், திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவில் இருந்து தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. இன்று காலையும் மழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பெண்ணாடம் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகனங்களில் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 47 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. மற்ற ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையினால் கடலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்து பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்துவருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மழை தொடர்ந்து பெய்து வந்தது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
மேலும் கடலூர் பகுதியில் உள்ள பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. மேலும் ஒருசில வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் கடலூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றினர். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம், அண்ணா விளையாட்டு மைதானம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வடக்கு பாளையங்கோட்டை, புதுப்பாளையம், நாச்சியார் பேட்டை, ஸ்ரீஆதிவராகநல்லூர், மதகளிர் மாணிக்கம், அம்புஜவள்ளிபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் சாலையில் சென்றனர்.
ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக அந்த பகுதியில் உள்ள குன்னத்துஏரி உள்பட 8 ஏரி குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெண்ணாடம், திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவில் இருந்து தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. இன்று காலையும் மழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பெண்ணாடம் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகனங்களில் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 47 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. மற்ற ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையினால் கடலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Next Story






