என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இதையெல்லாம் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? - மு.க.அழகிரி பாய்ச்சல்
Byமாலை மலர்13 Nov 2019 7:34 AM GMT (Updated: 13 Nov 2019 7:34 AM GMT)
திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து மு.க.அழகிரியிடம் கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் இதையெல்லாம் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று அவர் கூறினார்.
காரைக்குடி:
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மகள் சிந்துஜா திருமணம் வருகிற 15-ந் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது. திருமணத்தில் பங்கேற்குமாறு முக்கிய பிரமுகர்களுக்கு எச்.ராஜா பத்திரிகை வழங்கி அழைப்பு விடுத்தார். மு.க.அழகிரிக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்தார்.
இதையொட்டி மு.க.அழகிரி இன்று காரைக்குடியில் உள்ள எச்.ராஜா இல்லத்துக்கு வந்தார். சிறிது நேரம் எச்.ராஜாவுடன் பேசிக் கொண்டிருந்த அவர், அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது நிருபர்கள், தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, நான் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அப்படியிருக்கும்போது அதுபற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? என்றார்.
தொடர்ந்து நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றபோது அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மகள் சிந்துஜா திருமணம் வருகிற 15-ந் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது. திருமணத்தில் பங்கேற்குமாறு முக்கிய பிரமுகர்களுக்கு எச்.ராஜா பத்திரிகை வழங்கி அழைப்பு விடுத்தார். மு.க.அழகிரிக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்தார்.
இதையொட்டி மு.க.அழகிரி இன்று காரைக்குடியில் உள்ள எச்.ராஜா இல்லத்துக்கு வந்தார். சிறிது நேரம் எச்.ராஜாவுடன் பேசிக் கொண்டிருந்த அவர், அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது நிருபர்கள், தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, நான் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அப்படியிருக்கும்போது அதுபற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? என்றார்.
தொடர்ந்து நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றபோது அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X