என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம் வாபஸ்
Byமாலை மலர்7 Nov 2019 6:14 AM GMT (Updated: 7 Nov 2019 6:14 AM GMT)
வேலூர் ஜெயிலில் 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
வேலூர்:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.
தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் கடந்த 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி முருகனிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முருகன் தொடர்ந்து சாப்பிட மறுத்து வந்தார். நேற்று 20-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.
ஜெயில் அதிகாரிகள் அவரிடம் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறையில் மீண்டும் சலுகை வழங்க வேண்டும். நளினியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என முருகன் கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து முருகன் பழம் சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.
முன்னதாக முருகனுக்கு ஆதரவாக 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நளினி நேற்று முன்தினம் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.
தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் கடந்த 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி முருகனிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முருகன் தொடர்ந்து சாப்பிட மறுத்து வந்தார். நேற்று 20-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.
ஜெயில் அதிகாரிகள் அவரிடம் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறையில் மீண்டும் சலுகை வழங்க வேண்டும். நளினியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என முருகன் கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து முருகன் பழம் சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.
முன்னதாக முருகனுக்கு ஆதரவாக 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நளினி நேற்று முன்தினம் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X