என் மலர்
செய்திகள்

கைதான ஷேக் பரீத்- போலிவாக்காளர் அடையாள அட்டை தயாரிக்க பயன்படுத்திய கம்பியூட்டரை படத்தில் காணலாம்.
போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த வாலிபர் கைது
கடலூரில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலியாக தயாரித்த கார்டுகள் மற்றும் அதற்கு பயன்படுத்திய பிரிண்டர் மெஷீன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
கடலூர்:
கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ்விடம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டை பகுதியில் உள்ள கோட்லாம்பாக்கத்தில் தனியார் கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று உள்ளது.
அந்த கம்யூட்டர் சென்டரில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து கடலூர் வாக்காளர் பதிவு அலுவலரின் கையொப்பம் போலியாக பதிவு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக கலெக்டர் அன்பு செல்வனுக்கு புகார் வந்தது.
அதனடிப்படையில் புதுப்பேட்டையில் தனியார் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ஷேக் பரீத் என்பவர் இதில் சம்பந்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக நாங்கள் விசாரணை செய்ததில் போலியாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஆகையால் இது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்திருந்தார். அதன் பேரில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் புதுப்பேட்டை கோட்லாம்பாக்கம் பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் போலியாக அலுவலர் கையொப்பமிட்டு போலி வாக்காளர் அடையாள அட்டை பொது மக்களுக்கு வழங்கியது உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கம்ப்யூட்டர் சென்டர் ஷேக் பரீத் என்பவரை கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் அரசின் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக பொதுமக்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை கார்டில் பிரிண்ட் செய்து வழங்கியது தெரியவந்தது. மேலும் போலியாக தயாரித்த கார்டுகள் மற்றும் அதற்கு பயன்படுத்திய பிரிண்டர் மெஷீன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். இதனைத் தொடர்ந்து ஷேக் பரீத்தை (வயது 46) போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ்விடம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டை பகுதியில் உள்ள கோட்லாம்பாக்கத்தில் தனியார் கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று உள்ளது.
அந்த கம்யூட்டர் சென்டரில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து கடலூர் வாக்காளர் பதிவு அலுவலரின் கையொப்பம் போலியாக பதிவு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக கலெக்டர் அன்பு செல்வனுக்கு புகார் வந்தது.
அதனடிப்படையில் புதுப்பேட்டையில் தனியார் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ஷேக் பரீத் என்பவர் இதில் சம்பந்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக நாங்கள் விசாரணை செய்ததில் போலியாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஆகையால் இது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்திருந்தார். அதன் பேரில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் புதுப்பேட்டை கோட்லாம்பாக்கம் பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் போலியாக அலுவலர் கையொப்பமிட்டு போலி வாக்காளர் அடையாள அட்டை பொது மக்களுக்கு வழங்கியது உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கம்ப்யூட்டர் சென்டர் ஷேக் பரீத் என்பவரை கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் அரசின் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக பொதுமக்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை கார்டில் பிரிண்ட் செய்து வழங்கியது தெரியவந்தது. மேலும் போலியாக தயாரித்த கார்டுகள் மற்றும் அதற்கு பயன்படுத்திய பிரிண்டர் மெஷீன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். இதனைத் தொடர்ந்து ஷேக் பரீத்தை (வயது 46) போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






