என் மலர்
செய்திகள்

மெய்யூர் ஏரி நிரம்பி வழியும் காட்சி
காஞ்சிபுரம்- திருவள்ளூர் மாவட்டத்தில் 36 ஏரிகள் நிரம்பின
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூரில் மொத்தம் 36 ஏரிகள் நிரம்பியுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக 13 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பண்ருட்டி புதுஏரி, எறையூர் தேவனேரி, வல்லம் சித்தேரி, கரூர் தண்டலத்தேரி, கூரம் சித்தேரி, புக்கத்துறை ஏரி உள்பட 13 ஏரிகள் கொள்ளளவை எட்டி உள்ளது.
இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 324 ஏரிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக 23 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 36 ஏரிகள் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஏரிகளில் ஓரளவு தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 8 மணி நிலவரப்படி பூண்டி ஏரியில் 1582 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 1413 கனஅடி ஆக உள்ளது. சென்னைக்கு 464 கன அடி வீதம் அனுப்பப்பட்டு வருகிறது.
புழல் ஏரியில் 3330 மில்லியன் கனஅடி நீர் சேமித்து வைக்கலாம். ஏரியில் தற்போது 708 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 520 கனஅடி ஆக உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்கு 75 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோழாவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கனஅடி. தற்போது 121 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 70 கனஅடி ஆகும்.
செம்பரம்பாக்கம் ஏரியில் 3645 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது வெறும் 44 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. 81 கனஅடி தண்ணீர் ஏரிக்கு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக 13 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பண்ருட்டி புதுஏரி, எறையூர் தேவனேரி, வல்லம் சித்தேரி, கரூர் தண்டலத்தேரி, கூரம் சித்தேரி, புக்கத்துறை ஏரி உள்பட 13 ஏரிகள் கொள்ளளவை எட்டி உள்ளது.
இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 324 ஏரிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக 23 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 36 ஏரிகள் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஏரிகளில் ஓரளவு தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 8 மணி நிலவரப்படி பூண்டி ஏரியில் 1582 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 1413 கனஅடி ஆக உள்ளது. சென்னைக்கு 464 கன அடி வீதம் அனுப்பப்பட்டு வருகிறது.
புழல் ஏரியில் 3330 மில்லியன் கனஅடி நீர் சேமித்து வைக்கலாம். ஏரியில் தற்போது 708 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 520 கனஅடி ஆக உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்கு 75 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோழாவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கனஅடி. தற்போது 121 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 70 கனஅடி ஆகும்.
செம்பரம்பாக்கம் ஏரியில் 3645 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது வெறும் 44 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. 81 கனஅடி தண்ணீர் ஏரிக்கு வருகிறது.
Next Story






