search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி

    வேலூர் அருகே வங்கி பூட்டு உடைத்து மர்மகும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை வழக்கம்போல் பணிகள் முடிந்து வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் வங்கியின் முன்பக்க கேட் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து போலீசாருக்கு தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் வந்த பார்த்தனர். வங்கி கேட்டின் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டிருந்தது

    இது குறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த 9-ந் தேதி அதே பகுதியில் உள்ள மற்றொரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது.

    தற்போது மீண்டும் மற்றொரு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×