என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் மாவட்டத்தில் டெங்குவால் 792 பேர் பாதிப்பு
Byமாலை மலர்16 Oct 2019 4:28 AM GMT (Updated: 16 Oct 2019 4:28 AM GMT)
வேலூர் மாவட்டத்தில் டெங்குவால் 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார துறையினர் மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 348 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு 792 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரக்கோணம், காவேரிப்பாக்கம் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சியில் 123 பேருக்கு டெங்கு உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேர்த்து மொத்தம் 1000 படுக்கைகள் மட்டுமே உள்ளது.
இதில் பிரசவ வார்டு போக மீதம் 700 படுக்கைகளே உள்ள நிலையில் 792 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெங்கு பாதிப்பு அதிகரித்தால் அரசு ஆஸ்பத்திரிகளில் இடமில்லாத நிலை ஏற்படும் என்பதால் அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.
சுகாதார துறையினர் மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். வீடு வீடாக சென்று டெங்கு கொசு உள்ளதா? என ஆய்வு செய்கின்றனர்.
கொசு ஒழிப்பு பணிகளை மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளை ஈடுபடுத்த வேண்டும். டெங்கு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் முழு சுகாதார பணி மேற்கொள்ள வேண்டும்.
முற்றிலும் கொசுவை ஒழித்தால் மட்டுமே டெங்குவை கட்டுப்படுத்த முடியும் இதில் உள்ளாட்சி அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் 16 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 348 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு 792 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரக்கோணம், காவேரிப்பாக்கம் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சியில் 123 பேருக்கு டெங்கு உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேர்த்து மொத்தம் 1000 படுக்கைகள் மட்டுமே உள்ளது.
இதில் பிரசவ வார்டு போக மீதம் 700 படுக்கைகளே உள்ள நிலையில் 792 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெங்கு பாதிப்பு அதிகரித்தால் அரசு ஆஸ்பத்திரிகளில் இடமில்லாத நிலை ஏற்படும் என்பதால் அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.
சுகாதார துறையினர் மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். வீடு வீடாக சென்று டெங்கு கொசு உள்ளதா? என ஆய்வு செய்கின்றனர்.
கொசு ஒழிப்பு பணிகளை மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளை ஈடுபடுத்த வேண்டும். டெங்கு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் முழு சுகாதார பணி மேற்கொள்ள வேண்டும்.
முற்றிலும் கொசுவை ஒழித்தால் மட்டுமே டெங்குவை கட்டுப்படுத்த முடியும் இதில் உள்ளாட்சி அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் 16 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X