என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அந்தியூரில் வீட்டு வாசல்களில் ரத்தக்கறையால் திடீர் பரபரப்பு - பொதுமக்கள் அச்சம்
Byமாலை மலர்15 Oct 2019 4:55 AM GMT (Updated: 15 Oct 2019 4:55 AM GMT)
அந்தியூரில் இன்று காலை வீட்டு வாசல்களில் ரத்தக்கறை படிந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுபாளையம் பிரம்மதேசம் சாலையில் அழகு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் எதிரே பெரிய தோட்டம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
நேற்று இரவு வழக்கம்போல் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தூங்கி விட்டனர். இன்று காலை வெளியே வந்து பார்த்தபோது பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ரத்தக்கறை படிந்திருந்தது. தங்கள் வீட்டில் மட்டும்தான் ரத்தம் படிந்து உள்ளதா? என சந்தேகப்பட்டு பார்த்த மக்கள் அனைத்து வீட்டு வாசல்களிலும் ரத்தம் படிந்துள்ளதால் ஒரு வித பீதியுடன் காணப்படுகிறார்கள்.
இரவு நேரத்தில் யாரோ இந்த ரத்தத்தை தெளித்து சென்றது போல் உள்ளது.
அந்த பகுதியில் சுடுகாடு உள்ளது என்பதால் பொதுமக்கள் மேலும் அச்சத்துடன் காணப்படுகிறார்கள்.
யாராவது ஆடு அல்லது கோழி பலியிட்டு இந்த வழியாக சென்றபோது ரத்தக்கறை படிந்ததா? அல்லது ஒவ்வொரு வீட்டு வாசல்களிலும் ரத்தத்தை தெளித்து யாராவது பரிகாரம் எதுவும் செய்து இருப்பார்களா? என அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி கொண்டார்கள்.
இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வருண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
வீட்டு வாசல்களில் ரத்தக்கறை படிந்திருப்பதை கண்டு போலீசாரும் ஆச்சரியம் அடைந்து உள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டு முன் ரத்தம் சிந்தியிருப்பதை பார்வையிடும் மக்கள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுபாளையம் பிரம்மதேசம் சாலையில் அழகு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் எதிரே பெரிய தோட்டம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
நேற்று இரவு வழக்கம்போல் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தூங்கி விட்டனர். இன்று காலை வெளியே வந்து பார்த்தபோது பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ரத்தக்கறை படிந்திருந்தது. தங்கள் வீட்டில் மட்டும்தான் ரத்தம் படிந்து உள்ளதா? என சந்தேகப்பட்டு பார்த்த மக்கள் அனைத்து வீட்டு வாசல்களிலும் ரத்தம் படிந்துள்ளதால் ஒரு வித பீதியுடன் காணப்படுகிறார்கள்.
இரவு நேரத்தில் யாரோ இந்த ரத்தத்தை தெளித்து சென்றது போல் உள்ளது.
அந்த பகுதியில் சுடுகாடு உள்ளது என்பதால் பொதுமக்கள் மேலும் அச்சத்துடன் காணப்படுகிறார்கள்.
யாராவது ஆடு அல்லது கோழி பலியிட்டு இந்த வழியாக சென்றபோது ரத்தக்கறை படிந்ததா? அல்லது ஒவ்வொரு வீட்டு வாசல்களிலும் ரத்தத்தை தெளித்து யாராவது பரிகாரம் எதுவும் செய்து இருப்பார்களா? என அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி கொண்டார்கள்.
இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வருண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
வீட்டு வாசல்களில் ரத்தக்கறை படிந்திருப்பதை கண்டு போலீசாரும் ஆச்சரியம் அடைந்து உள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டு முன் ரத்தம் சிந்தியிருப்பதை பார்வையிடும் மக்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X