என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீர்காழி அருகே விபத்து- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
Byமாலை மலர்11 Oct 2019 4:42 AM GMT (Updated: 11 Oct 2019 4:42 AM GMT)
சீர்காழி அருகே இன்று அதிகாலை நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
சீர்காழி:
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 68). ஸ்தபதி. இவரது மனைவி சாந்தி (50). இவர்களது மகள் சுபத்ரா (38).
இந்த நிலையில் சுபத்ரா கணவர் சரவணன், நேற்று துபாய் நாட்டுக்கு வேலைக்காக புறப்பட்டார். இதற்காக சோமசுந்தரம், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 7 பேருடன் காரில் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.
பின்னர் இரவு 10.30 மணியளவில் மருமகன் சரவணனை, வெளிநாட்டுக்கு வழியனுப்பி விட்டு காரில் சொந்த ஊருக்கு நேற்று இரவு புறப்பட்டனர்.
காரில் சோமசுந்தரம், அவரது மனைவி சாந்தி, மகள் சுபத்ரா மற்றும் சுபத்ராவின் மகன் புவனேஸ்வரன் (14) , சுபத்ராவின் உறவினர்கள் காட்டுமன்னார்கோவில் திருசின்னபுரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (40), அவரது தாய் அன்னப்பூரணி, மகள் சாய்ஸ்ரீ (8) ஆகியோர் இருந்தனர். காரை செந்தில்குமார் ஓட்டினார்.
இன்று அதிகாலை 2 மணியளவில் நாகை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் கோவில்பத்து அருகே கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது சீர்காழியில் இருந்து சிதம்பரம் நோக்கி பால் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்தது. இந்த நிலையில் திடீரென எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி சோமசுந்தரம், சாந்தி, சுபத்ரா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
மேலும் சுபத்ராவின் மகன் புவனேஸ்வரன், செந்தில்குமார், அவரது மகள் சாய்ஸ்ரீ, தாய் அன்னபூரணி ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக 4 பேரையும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சீர்காழி டி.எஸ்.பி. வந்தனா, இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து பற்றி சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டேங்கர் லாரி- கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை- தாய்- மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 68). ஸ்தபதி. இவரது மனைவி சாந்தி (50). இவர்களது மகள் சுபத்ரா (38).
இந்த நிலையில் சுபத்ரா கணவர் சரவணன், நேற்று துபாய் நாட்டுக்கு வேலைக்காக புறப்பட்டார். இதற்காக சோமசுந்தரம், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 7 பேருடன் காரில் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.
பின்னர் இரவு 10.30 மணியளவில் மருமகன் சரவணனை, வெளிநாட்டுக்கு வழியனுப்பி விட்டு காரில் சொந்த ஊருக்கு நேற்று இரவு புறப்பட்டனர்.
காரில் சோமசுந்தரம், அவரது மனைவி சாந்தி, மகள் சுபத்ரா மற்றும் சுபத்ராவின் மகன் புவனேஸ்வரன் (14) , சுபத்ராவின் உறவினர்கள் காட்டுமன்னார்கோவில் திருசின்னபுரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (40), அவரது தாய் அன்னப்பூரணி, மகள் சாய்ஸ்ரீ (8) ஆகியோர் இருந்தனர். காரை செந்தில்குமார் ஓட்டினார்.
இன்று அதிகாலை 2 மணியளவில் நாகை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் கோவில்பத்து அருகே கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது சீர்காழியில் இருந்து சிதம்பரம் நோக்கி பால் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்தது. இந்த நிலையில் திடீரென எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி சோமசுந்தரம், சாந்தி, சுபத்ரா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
மேலும் சுபத்ராவின் மகன் புவனேஸ்வரன், செந்தில்குமார், அவரது மகள் சாய்ஸ்ரீ, தாய் அன்னபூரணி ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக 4 பேரையும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சீர்காழி டி.எஸ்.பி. வந்தனா, இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து பற்றி சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டேங்கர் லாரி- கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை- தாய்- மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X