என் மலர்
செய்திகள்

சைலேந்திரபாபு
வீரப்பனை வீழ்த்த காரணமாக இருந்தவர் தேவாரம் - ரெயில்வே ஐ.ஜி. சைலேந்திர பாபு
வீரப்பனை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தவர் தேவாரம் என்று ரெயில்வே ஐ.ஜி. சைலேந்திர பாபு கூறினார்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான 2 நாட்கள் தடகளப் போட்டிகள் நடந்தன.
இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரெயில்வே ஐ.ஜி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பேசினார்.

இந்த சத்தியமங்கலம் பகுதியில் முன்பு சந்தன கடத்தல் வீரப்பன் சிம்ம சொப்பனமாக இருந்தான். அவனை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தவர் தேவாரம். வீரப்பனிடம் 150 பேர் இருந்தனர். கடைசியாக வெறும் 5 பேர் மட்டுமே இருந்தனர். இதற்கு காரணமாக திகழ்ந்தவர் தேவாரம். வீரப்பனிடம் 150 பேர் இருந்ததை 5 பேராக குறைத்தார். இறுதியில் அதிரடிப்படையால் வீரப்பன் வீழ்ந்தான்.
இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.
சத்தியமங்கலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான 2 நாட்கள் தடகளப் போட்டிகள் நடந்தன.
இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரெயில்வே ஐ.ஜி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பேசினார்.
போட்டிகளில் பங்கேற்றவர்களையும், வெற்றி பெற்றவர்களையும் வாழ்த்தி பாராட்டுகிறேன். இந்த விளையாட்டு போட்டிகளில் கிடைத்த வெற்றி மூலம் வருங்காலத்தில் உங்களுக்கு போலீஸ் துறை, ரெயில்வே துறை, தீயணைப்பு துறை மற்றும் ராணுவத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்த சத்தியமங்கலம் பகுதியில் முன்பு சந்தன கடத்தல் வீரப்பன் சிம்ம சொப்பனமாக இருந்தான். அவனை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தவர் தேவாரம். வீரப்பனிடம் 150 பேர் இருந்தனர். கடைசியாக வெறும் 5 பேர் மட்டுமே இருந்தனர். இதற்கு காரணமாக திகழ்ந்தவர் தேவாரம். வீரப்பனிடம் 150 பேர் இருந்ததை 5 பேராக குறைத்தார். இறுதியில் அதிரடிப்படையால் வீரப்பன் வீழ்ந்தான்.
இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.
Next Story






