என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழடியில் ‘நீளச்சுவர்’ கண்டுபிடிப்பு
Byமாலை மலர்10 Sep 2019 3:15 AM GMT (Updated: 10 Sep 2019 3:15 AM GMT)
கீழடியில் ஆராய்ச்சி செய்யும்போது 3 கல் வரிசை கொண்ட தொழிற்கூட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி தொடங்கியது.
இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்பு காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக் உட்பட 600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி, உறைகிணறு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் போதகுரு நிலத்தில் ஏற்கனவே வட்டவடிவிலான ஒரு செங்கல்வரிசை சுவர் கண்டறியப்பட்டது. மீண்டும் ஆராய்ச்சி செய்யும்போது 3 கல் வரிசை கொண்ட தொழிற்கூட சுவர் போல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுவர் நீண்டு கொண்டே செல்வதால் இதன் தொடர்ச்சி அடுத்துள்ள நிலத்திலும் இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி தொடங்கியது.
இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்பு காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக் உட்பட 600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி, உறைகிணறு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் போதகுரு நிலத்தில் ஏற்கனவே வட்டவடிவிலான ஒரு செங்கல்வரிசை சுவர் கண்டறியப்பட்டது. மீண்டும் ஆராய்ச்சி செய்யும்போது 3 கல் வரிசை கொண்ட தொழிற்கூட சுவர் போல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுவர் நீண்டு கொண்டே செல்வதால் இதன் தொடர்ச்சி அடுத்துள்ள நிலத்திலும் இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X