என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் தற்கொலை
Byமாலை மலர்10 Aug 2019 7:22 AM GMT (Updated: 10 Aug 2019 7:22 AM GMT)
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ராணுவீரர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர்:
வேலூர் அடுத்த கணியம்பாடி என்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 30). ராணுவவீரர். இவரது மனைவி புவனேஸ்வரி கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு கடந்த 1 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இன்று காலை இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது 2 பேருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
திடீரென அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் சத்தமாக பேசிக்கொண்டனர்.
அப்போது திடீரென ஆவேசம் அடைந்த மகேஷ் மோட்டர் சைக்கிளை நிறுத்திவிட்டு மேம்பால சுவற்றின் மீது ஏறி நின்று கீழே குதித்தார். அவர் கலெக்டர் அலுவலகம் ஒட்டி உள்ள பஸ் நிறுத்தம் அருகே வந்து தலைகீழாக விழுந்தார்.
இதில் அவரது தலை இரண்டாக பிளந்து ரத்தம் கொட்டியது. துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்ட அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது மனைவி மேம்பாலத்தில் நின்றபடி கதறி அழுதார். சாலையில் இருந்த வாகன ஓட்டிகள் அவரை அரவணைத்து சமாதானம் செய்தனர்.
இதுபற்றி சத்துவாச்சாரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராணுவ வீரர் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது மனைவியை ஆட்டோவில் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். வழியிலேயே அவர் மயக்கம் அடைந்தார். அவரை வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
மேலும் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சத்துவாச்சாரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் அடுத்த கணியம்பாடி என்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 30). ராணுவவீரர். இவரது மனைவி புவனேஸ்வரி கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு கடந்த 1 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இன்று காலை இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது 2 பேருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
திடீரென அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் சத்தமாக பேசிக்கொண்டனர்.
அப்போது திடீரென ஆவேசம் அடைந்த மகேஷ் மோட்டர் சைக்கிளை நிறுத்திவிட்டு மேம்பால சுவற்றின் மீது ஏறி நின்று கீழே குதித்தார். அவர் கலெக்டர் அலுவலகம் ஒட்டி உள்ள பஸ் நிறுத்தம் அருகே வந்து தலைகீழாக விழுந்தார்.
இதில் அவரது தலை இரண்டாக பிளந்து ரத்தம் கொட்டியது. துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்ட அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது மனைவி மேம்பாலத்தில் நின்றபடி கதறி அழுதார். சாலையில் இருந்த வாகன ஓட்டிகள் அவரை அரவணைத்து சமாதானம் செய்தனர்.
இதுபற்றி சத்துவாச்சாரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராணுவ வீரர் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது மனைவியை ஆட்டோவில் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். வழியிலேயே அவர் மயக்கம் அடைந்தார். அவரை வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
மேலும் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சத்துவாச்சாரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X