என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூர் அருகே நிலத்தகராறில் விவசாயி வெட்டிக்கொலை- தம்பி கைது
Byமாலை மலர்9 Aug 2019 4:50 AM GMT (Updated: 9 Aug 2019 4:50 AM GMT)
அரியலூர் அருகே நிலத்தகராறில் தம்பியை அண்ணனே வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தோடு வட்டம் பார்ப்பனஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50). இவரது சகோதரர் ராமலிங்கம் (46). விவசாயிகளான இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை ராமலிங்கம் தனக்கு பிரித்து தருமாறு கோவிந்தராஜிடம் கேட்டு வந்தார். ஆனால் அவர் பிரித்து கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அண்ணன்-தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு ராமலிங்கம், வயலில் விவசாய பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். செம்போடை பகுதியில் செல்லும் போது அங்கு மறைந்திருந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது நண்பர் வெங்கடேஷ்(31) ஆகிய 2பேரும் சேர்ந்து, திடீரென ராமலிங்கத்தை வழிமறித்து அவரை உருட்டுக்கட்டையால் சரமாரி தாக்கியுள்ளனர். மேலும் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
செம்போடை பகுதி அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதி என்பதால் அரியலூர் போலீஸ் டி.எஸ்.பி. இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நிலத்தகராறில் ராமலிங்கத்தை அவரது சகோதரர் கோவிந்தராஜ், நண்பர் வெங்கடேசுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் தம்பியை அண்ணனே வெட்டிக் கொன்ற சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தோடு வட்டம் பார்ப்பனஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50). இவரது சகோதரர் ராமலிங்கம் (46). விவசாயிகளான இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை ராமலிங்கம் தனக்கு பிரித்து தருமாறு கோவிந்தராஜிடம் கேட்டு வந்தார். ஆனால் அவர் பிரித்து கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அண்ணன்-தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு ராமலிங்கம், வயலில் விவசாய பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். செம்போடை பகுதியில் செல்லும் போது அங்கு மறைந்திருந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது நண்பர் வெங்கடேஷ்(31) ஆகிய 2பேரும் சேர்ந்து, திடீரென ராமலிங்கத்தை வழிமறித்து அவரை உருட்டுக்கட்டையால் சரமாரி தாக்கியுள்ளனர். மேலும் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
செம்போடை பகுதி அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதி என்பதால் அரியலூர் போலீஸ் டி.எஸ்.பி. இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நிலத்தகராறில் ராமலிங்கத்தை அவரது சகோதரர் கோவிந்தராஜ், நண்பர் வெங்கடேசுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் தம்பியை அண்ணனே வெட்டிக் கொன்ற சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X