என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    அத்திவரதர் பாதுகாப்பு பணிக்கு வந்த கோவை சப்-இன்ஸ்பெக்டர் ‘திடீர்’ மரணம்

    காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் அத்திவரதர் விழாவையொட்டி பாதுகாப்பு பணிக்கு வந்த கோவை சப்-இன்ஸ்பெக்டர் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தார்.

    காஞ்சீபுரம், ஆக. 8-

    அத்திவரதர் விழாவை யொட்டி காஞ்சீபுரத்தில் சுமார் 12 ஆயிரம் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்ட போலீசார் இதில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கோவையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் வெள் ளிங்கிரி (வயது50) பாதுகாப்பு பணிக்காக காஞ்சீபுரம் வந்து இருந்தார். அவர் பணி முடிந்து வாலாஜாபாத்தில் தங்கி இருந்தார்.

    திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வெள்ளிங்கிரி இறந் தார்.

    பாதுகாப்பு பணிக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி வெள்ளிங் கிரியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×