search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் ரெயில்
    X
    குடிநீர் ரெயில்

    கடந்த 23 நாட்களில் ரெயிலில் 85 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது

    கடந்த 23 நாட்களில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இதுவரை ரெயிலில் 85 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    வேலூர்:

    சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தினசரி 10 மில்லியன் லிட்டர் (1 கோடி லிட்டர்) குடிநீரை ரெயில் வேகன்கள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஒரு ரெயிலில் 50 வேகன்கள் பொருத்தப்பட்டு 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் வீதம் ஒருநாளைக்கு 4 தடவை 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    அதன்படி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரெயில் கடந்த 12-ந் தேதி புறப்பட்டது. அந்த ரெயில் சென்னை சென்று வர தண்ணீர் பிடிக்க, இறக்க என மொத்தம் 16 மணி நேரம் ஆகிறது. இதனால் தினசரி ஒரே ஒரு ரெயிலில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே சென்னைக்கு கொண்டு செல்ல முடிந்தது.

    கூடுதலாக 3 ரெயில்கள் தர வேண்டும் என மெட்ரோ அதிகாரிகள் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராஜஸ்தானில் இருந்து 50 வேகன் கொண்ட மற்றொரு ரெயில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த ரெயில் ஜோலார்பேட்டைக்கு 23-ந் தேதி வந்தது. அன்றிலிருந்து பகலில் ஒரு ரெயில் இரவில் ஒரு ரெயில் என சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    2 ரெயில்களில் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதால் சென்னைக்கு தினமும் 5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது.

    கடந்த 23 நாட்களில் 85 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதிகளுக்கு இந்த குடிநீர் சப்ளை செய்யபடுகிறது. கூடுதலாக ரெயில் இயக்கினால் திட்டமிட்டபடி தினமும் 10 மில்லியன் குடிநீர் கொண்ட செல்ல முடியும்.

    அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×