என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடந்த 23 நாட்களில் ரெயிலில் 85 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது
Byமாலை மலர்3 Aug 2019 5:21 AM GMT (Updated: 3 Aug 2019 5:21 AM GMT)
கடந்த 23 நாட்களில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இதுவரை ரெயிலில் 85 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வேலூர்:
சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தினசரி 10 மில்லியன் லிட்டர் (1 கோடி லிட்டர்) குடிநீரை ரெயில் வேகன்கள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒரு ரெயிலில் 50 வேகன்கள் பொருத்தப்பட்டு 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் வீதம் ஒருநாளைக்கு 4 தடவை 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
அதன்படி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரெயில் கடந்த 12-ந் தேதி புறப்பட்டது. அந்த ரெயில் சென்னை சென்று வர தண்ணீர் பிடிக்க, இறக்க என மொத்தம் 16 மணி நேரம் ஆகிறது. இதனால் தினசரி ஒரே ஒரு ரெயிலில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே சென்னைக்கு கொண்டு செல்ல முடிந்தது.
கூடுதலாக 3 ரெயில்கள் தர வேண்டும் என மெட்ரோ அதிகாரிகள் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராஜஸ்தானில் இருந்து 50 வேகன் கொண்ட மற்றொரு ரெயில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த ரெயில் ஜோலார்பேட்டைக்கு 23-ந் தேதி வந்தது. அன்றிலிருந்து பகலில் ஒரு ரெயில் இரவில் ஒரு ரெயில் என சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
2 ரெயில்களில் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதால் சென்னைக்கு தினமும் 5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது.
கடந்த 23 நாட்களில் 85 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதிகளுக்கு இந்த குடிநீர் சப்ளை செய்யபடுகிறது. கூடுதலாக ரெயில் இயக்கினால் திட்டமிட்டபடி தினமும் 10 மில்லியன் குடிநீர் கொண்ட செல்ல முடியும்.
அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தினசரி 10 மில்லியன் லிட்டர் (1 கோடி லிட்டர்) குடிநீரை ரெயில் வேகன்கள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒரு ரெயிலில் 50 வேகன்கள் பொருத்தப்பட்டு 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் வீதம் ஒருநாளைக்கு 4 தடவை 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
அதன்படி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரெயில் கடந்த 12-ந் தேதி புறப்பட்டது. அந்த ரெயில் சென்னை சென்று வர தண்ணீர் பிடிக்க, இறக்க என மொத்தம் 16 மணி நேரம் ஆகிறது. இதனால் தினசரி ஒரே ஒரு ரெயிலில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே சென்னைக்கு கொண்டு செல்ல முடிந்தது.
கூடுதலாக 3 ரெயில்கள் தர வேண்டும் என மெட்ரோ அதிகாரிகள் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராஜஸ்தானில் இருந்து 50 வேகன் கொண்ட மற்றொரு ரெயில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த ரெயில் ஜோலார்பேட்டைக்கு 23-ந் தேதி வந்தது. அன்றிலிருந்து பகலில் ஒரு ரெயில் இரவில் ஒரு ரெயில் என சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
2 ரெயில்களில் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதால் சென்னைக்கு தினமும் 5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது.
கடந்த 23 நாட்களில் 85 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதிகளுக்கு இந்த குடிநீர் சப்ளை செய்யபடுகிறது. கூடுதலாக ரெயில் இயக்கினால் திட்டமிட்டபடி தினமும் 10 மில்லியன் குடிநீர் கொண்ட செல்ல முடியும்.
அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X