search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சிதம்பரத்தில் கடன்தொல்லையால் தாய்- மகன் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடன் தொல்லையால் தாய் மற்றும் மகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் காரீயபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஆண்டாள் (வயது 57). இவர்களது மகன்கள் செல்வகுமார் (30), ராஜ்குமார் (28).

    கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்து விட்டார். எனவே ஆண்டாள் தனது மகன்களுடன் வசித்து வந்தார்.

    ராஜ்குமார் ஆட்டோ டிரைவராக உள்ளார். தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்த செல்வகுமார் தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார், வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அதோடு இறந்து போன கணேசன் இருக்கும் சமயத்தில் கடன் தொல்லை இருந்தது.

    இளைய மகன் ராஜ்குமார் தன்னை விட்டு பிரிந்து சென்றதாலும், கடன் தொல்லை இருந்ததாலும் ஆண்டாள் மனவிரக்தியில் இருந்து வந்தார்.

    கடன் கொடுத்தவர்கள் கடந்த சில நாட்களாக அடிக்கடி வீட்டுக்கு வந்து நெருக்கடி கொடுத்தனர். இதனால் ஆண்டாள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.

    இன்று காலை வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சிதம்பரம் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ஆண்டாள் தனது மூத்த மகன் செல்வகுமாருடன் இறந்து கிடந்தார். இவர்கள் 2 பேரும் உத்திரத்தில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    2 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    நள்ளிரவில் தாய்-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×