என் மலர்
செய்திகள்

தீயின் வெப்பம் தாங்காமல் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்திருப்பதை படத்தில் காணலாம்.
விருத்தாசலம் அருகே கல்லூரி பஸ்சில் திடீர் தீ- போலீசார் விசாரணை
விருத்தாசலம் அருகே இன்று அதிகாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்லூரி பஸ் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. அந்த கல்லூரியில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் செல்வதற்கு வசதியாக விருத்தாசலத்தில் இருந்து பஸ் அனுப்பப்படுகிறது. அதன் மூலம் அந்த மாணவ, மாணவிகள் தினமும் பஸ்சில் செல்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு சென்றனர். பின்னர் மாலை கல்லூரி முடிந்தவுடன் பஸ்சில் வீட்டுக்கு வந்தனர். பின்னர் விருத்தாசலத்தில் டிரைவர் தினமும் நிறுத்தும் இடத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று அதிகாலை திடீரென புகை மூட்டத்துடன் பஸ் கொழுந்து விட்டு எரிந்தது. வெப்பம் தாங்காமல் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது.
மேலும் பஸ்சின் என்ஜின் பகுதி எரிந்து சேதம் அடைந்தது. உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் விருத்தாசலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பஸ்சில் பழுது ஏற்பட்டதன் காரணமாக தீ பிடித்ததா? அல்லது மர்ம நபர்கள் யாராவது பஸ்சில் தீ வைத்து கொளுத்திவிட்டு சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. அந்த கல்லூரியில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் செல்வதற்கு வசதியாக விருத்தாசலத்தில் இருந்து பஸ் அனுப்பப்படுகிறது. அதன் மூலம் அந்த மாணவ, மாணவிகள் தினமும் பஸ்சில் செல்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு சென்றனர். பின்னர் மாலை கல்லூரி முடிந்தவுடன் பஸ்சில் வீட்டுக்கு வந்தனர். பின்னர் விருத்தாசலத்தில் டிரைவர் தினமும் நிறுத்தும் இடத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று அதிகாலை திடீரென புகை மூட்டத்துடன் பஸ் கொழுந்து விட்டு எரிந்தது. வெப்பம் தாங்காமல் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது.
மேலும் பஸ்சின் என்ஜின் பகுதி எரிந்து சேதம் அடைந்தது. உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் விருத்தாசலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பஸ்சில் பழுது ஏற்பட்டதன் காரணமாக தீ பிடித்ததா? அல்லது மர்ம நபர்கள் யாராவது பஸ்சில் தீ வைத்து கொளுத்திவிட்டு சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






