என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி கற்பழிப்பு
    X
    மாணவி கற்பழிப்பு

    அரியலூர் அருகே திருமணம் செய்வதாக கூறி கல்லூரி மாணவி கற்பழிப்பு

    அரியலூர் அருகே திருமணம் செய்வதாக கூறி கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டது தொடர்பாக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள இலந்தைக்கூடத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் திருவையாறில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் செல்வியும் இலந்தைகூடத்தை சேர்ந்த அஜித்காந்த் (18) என்பவரும் பிளஸ்-2 வகுப்பில் ஒன்றாக படித்தனர். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

    சம்பவத்தன்று செல்வி வீட்டில் தனியாக இருக்கும் போது அங்கு சென்ற அஜித்காந்த், செல்வியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பிறகு அஜித்காந்த், செல்வியுடன் பழகுவதை நிறுத்தி விட்டார்.

    இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வி இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின்கீழ் அஜித்காந்தை கைது செய்தனர். இதையடுத்து அவரை அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி, 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அஜித்காந்த் அரியலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×