என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் முதுநகர் அருகே வாலிபர் படுகொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்6 July 2019 4:30 AM GMT (Updated: 6 July 2019 4:30 AM GMT)
கடலூர் முதுநகர் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் முதுநகரை அடுத்த மணக்குப்பம் வண்ணாங் குட்டை பகுதியில் தரிசுநிலம் உள்ளது. இங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் வெட்டுக்காயங்கள் இருந்தது.
இன்று காலை அந்த வழியாக நடந்து சென்ற பொது மக்கள் ரத்தகாயங்களுடன் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்த்தனர். அவர் கைலிமட்டும் அணிந்திருந்தார். கழுத்தில் வெட்டு காயங்கள் இருந்தன. அவரை யாரோ கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு பிணத்தை வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பின்னர் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இறந்து கிடந்த வாலிபரை பற்றி விபரம் எதுவும் தெரியவில்லை என்று கூறினர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து இறந்த வாலிபர் யார் என்றும், அவரை கொலை செய்த மர்ம மனிதர்கள் யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் முதுநகரை அடுத்த மணக்குப்பம் வண்ணாங் குட்டை பகுதியில் தரிசுநிலம் உள்ளது. இங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் வெட்டுக்காயங்கள் இருந்தது.
இன்று காலை அந்த வழியாக நடந்து சென்ற பொது மக்கள் ரத்தகாயங்களுடன் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்த்தனர். அவர் கைலிமட்டும் அணிந்திருந்தார். கழுத்தில் வெட்டு காயங்கள் இருந்தன. அவரை யாரோ கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு பிணத்தை வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பின்னர் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இறந்து கிடந்த வாலிபரை பற்றி விபரம் எதுவும் தெரியவில்லை என்று கூறினர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து இறந்த வாலிபர் யார் என்றும், அவரை கொலை செய்த மர்ம மனிதர்கள் யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X