search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவாரத்தில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி- வாலிபர் கைது
    X

    தேவாரத்தில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி- வாலிபர் கைது

    வீட்டுக்குள் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணாண்டிபட்டியைச் சேர்ந்த பாண்டியன் மகள் மங்கையர்கரசி (வயது 26). இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் தனது மகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் ராஜ்குமார் (25) நைசாக வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் மங்கையர்கரசியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வரத் தொடங்கினர். இதனால் மங்கையர்கரசிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து தேவாரம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×