என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை
Byமாலை மலர்29 May 2019 7:30 AM GMT (Updated: 29 May 2019 7:32 AM GMT)
குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
பருவ மழை பொய்த்ததால் தமிழ்நாடு முழுவதும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குடிநீர் ஏரிகள் வறண்டு விட்டதால், சென்னை நகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆழ்குழாய் கிணறுகள், விவசாய கிணறுகள், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், வீராணம் ஏரி ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீர் சென்னை நகருக்கு ஓரளவு கைகொடுத்து வருகிறது.
அதுபோல் மற்ற மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது, விவசாய கிணறுகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுத்து வினியோகிப்பது குறித்தும் நிதி ஒதுக்கீடு பற்றியும் முடிவு செய்யப்பட்டது.
இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பருவ மழை பொய்த்ததால் தமிழ்நாடு முழுவதும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குடிநீர் ஏரிகள் வறண்டு விட்டதால், சென்னை நகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆழ்குழாய் கிணறுகள், விவசாய கிணறுகள், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், வீராணம் ஏரி ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீர் சென்னை நகருக்கு ஓரளவு கைகொடுத்து வருகிறது.
அதுபோல் மற்ற மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது, விவசாய கிணறுகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுத்து வினியோகிப்பது குறித்தும் நிதி ஒதுக்கீடு பற்றியும் முடிவு செய்யப்பட்டது.
இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X