search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடசேரியில் கமல்ஹாசன் உருவபொம்மை எரித்த 51 பேர் மீது வழக்கு
    X

    வடசேரியில் கமல்ஹாசன் உருவபொம்மை எரித்த 51 பேர் மீது வழக்கு

    வடசேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 51 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், இந்து மதம் தொடர்பாக பேசிய கருத்திற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாகர்கோவில் வடசேரியில் இந்து முன்னணி கட்சியினர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக வடசேரி போலீசார் இந்து முன்னணியைச் சேர்ந்த மிசாசோமன், பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் உள்பட 51 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×