search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலாஜா அருகே விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் பிடிபட்டனர்- விடுதி மேலாளர் உள்பட 2 பேர் கைது
    X

    வாலாஜா அருகே விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் பிடிபட்டனர்- விடுதி மேலாளர் உள்பட 2 பேர் கைது

    வாலாஜா அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் பிடித்தனர். விடுதி மேலாளர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

    வாலாஜா:

    வேலூர் மாவட்டம் வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் வாலாஜா பகுதிகளில் உள்ள விடுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வாலாஜா பைபாஸ் ரோட்டில் வன்னிவேடு பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்தபோது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது.

    இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக திமிரி, பள்ளிப்பட்டு, காஞ்சீபுரம் பகுதிகளை சேர்ந்த 3 பெண்களை பிடித்து விசாரித்தனர்.

    இது தொடர்பாக வாலாஜா அடுத்த குடிமல்லூரை சேர்ந்த வினோத் (வயது 28), விடுதி மேலாளர் மணி (62) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பிடிபட்ட 3 பெண்களையும் காப்பத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×