search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்
    X

    திருப்பரங்குன்றம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்

    இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். #TNByPolls
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தலைவர்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 6-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் அவர் இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் 2-வது கட்ட மாக பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு நாகமலை புதுக்கோட்டையில் பிரசாரத்தை தொடங்குகிறார். அதைத் தொடர்ந்து வடபழஞ்சி தனக்கன்குளம், ஹார்விபட்டி, நிலையூர், கைத்தறி நகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இரவு 8.45 மணிக்கு திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.  #TNByPolls
    Next Story
    ×