search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ்சில் கடத்தப்பட்ட 3 மூட்டை குட்கா பறிமுதல்
    X

    பெங்களூரில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ்சில் கடத்தப்பட்ட 3 மூட்டை குட்கா பறிமுதல்

    பாராளுமன்ற தேர்தலையொட்டி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 3 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    கோவை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் அதிகாலை 3 மணியில் இருந்து வெளியூரில் இருந்து கோவைக்கு வரும் ஆம்னி பஸ்களில் காந்திபுரம், நவ இந்தியா, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது பெங்களூரில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பஸ்சில் காய்கறி பொருட்களுக்கு நடுவே 3 மூட்டைகளில் 150 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த 3 மூட்டை புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் என தெரிய வந்தது.மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆம்னி பஸ்சையும் பறிமுதல் செய்தனர்.

    புகையிலை பொருட்களை எடுக்க வந்த மர்மநபர்கள் அதிகாரிகள் சோதனையிடுவதை அறிந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களையும் அதிகாரிகள் தேடி வருகிறார்கள். #LSPolls

    Next Story
    ×