என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருநாவுக்கரசுக்கு உதவிய கல்லூரி தோழியை பிடிக்க தேடுதல் வேட்டை
Byமாலை மலர்14 March 2019 10:14 AM GMT (Updated: 14 March 2019 10:14 AM GMT)
திருநாவுக்கரசு இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய சம்பவத்தில் அவருடன் படித்த சேலத்தை சேர்ந்த தோழிக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. #PollachiAbuseCase
கோவை:
திருநாவுக்கரசு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ., படிக்கும் போது அதே கல்லூரியில் படித்த சேலத்தை சேர்ந்த ஒரு மாணவியுடன் நட்பாக பழகி உள்ளார்.
திருநாவுக்கரசு இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய சம்பவத்தில் அவருடன் படித்த சேலத்தை சேர்ந்த தோழிக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர் மூலம்தான் ஏராளமான பெண்களின் செல்போன் எண்கள் திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களுக்கு கிடைத்துள்ளது.
திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்த போது அவர் போலீஸ் கண்ணில் சிக்காமல் இருக்க அடைக்கலம் கொடுத்ததும் இந்த தோழிதான் என்பதும் தெரிய வந்துள்ளது.
அவர் யார்? எங்கு இருக்கிறார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை பிடித்து விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக் தகவல்கள் வெளிவரும் என்பதால் அவரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
திருநாவுக்கரசுக்கு உதவிய தோழியை பிடிக்க இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் திருநாவுக்கரசுவின் தோழியை தேடி சேலம் விரைந்துள்ளனர். #PollachiAbuseCase
திருநாவுக்கரசு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ., படிக்கும் போது அதே கல்லூரியில் படித்த சேலத்தை சேர்ந்த ஒரு மாணவியுடன் நட்பாக பழகி உள்ளார்.
திருநாவுக்கரசு இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய சம்பவத்தில் அவருடன் படித்த சேலத்தை சேர்ந்த தோழிக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர் மூலம்தான் ஏராளமான பெண்களின் செல்போன் எண்கள் திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களுக்கு கிடைத்துள்ளது.
திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்த போது அவர் போலீஸ் கண்ணில் சிக்காமல் இருக்க அடைக்கலம் கொடுத்ததும் இந்த தோழிதான் என்பதும் தெரிய வந்துள்ளது.
அவர் யார்? எங்கு இருக்கிறார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை பிடித்து விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக் தகவல்கள் வெளிவரும் என்பதால் அவரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
திருநாவுக்கரசுக்கு உதவிய தோழியை பிடிக்க இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் திருநாவுக்கரசுவின் தோழியை தேடி சேலம் விரைந்துள்ளனர். #PollachiAbuseCase
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X