என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மீனவ மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவோம் - கமல் ஹாசன்
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு 159 மீனவர்களுக்கு மீன் பிடி வலைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களும் உறவினர்கள் தான். குறிப்பாக வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வலுவான உறவினர்கள். எனக்கு மீனவர்களின் மீன்பிடி தொழிலில் உள்ள அனைத்து கஷ்டங்களும் தெரியும்.
கடந்த காலத்தில் நான் நடித்த கடல் மீன்கள் படத்திற்காக வலை விரித்து மீன் பிடிப்பது எப்படி என்பதை நன்கு அறிந்தவன். எனவே நான் மீனவர்களின் சீடன். சினிமாவிற்காக மட்டுமல்ல. தங்கியிருந்த அனைத்து நாட்களிலும் நானே வலை விரித்து மீன் பிடித்து அவர்களது கஷ்டங்களை நன்கு அறிந்தவன்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளன. அரசு கட்டங்கள் சேதமடைந்த நிலையில் பிரிக்கப்பட்ட காக்கா கூடு போல் உள்ளன. மேலும் பல இடங்களில் மரங்களும் அகற்றப்படாமல் உள்ளன.
புயல் நிவாரண பொருட்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். இந்த செயல் வேதனை அளிக்கிறது. புயலால் பாதித்த மக்களுக்குஅரசு என்ன செய்தது என்று தெரியவில்லை.
வெள்ளப்பள்ளம் மீனவர்களுக்கு கட்சி சார்பில் நாங்கள் கொடுப்பது கொடையோ, தர்மமோ அல்ல. நாங்கள் பட்ட கடன் ஆகும்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் கொடுக்கப்படும் பொருட்களும், நிவாரண உதவிகளும், நலத்திட்ட உதவிகளும் நேர்மையான முறையில் சம்பாதித்து வரிசெலுத்தி வெள்ளை பணத்தில் நான் (கறுப்பு பணம் அல்ல) உதவிகள் செய்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வதாராத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். இது தேர்தலுக்காக கூறப்படும் செய்தி அல்ல. மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற பாடுபடுவோம் .
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நடிகை ஸ்ரீபிரியா, மாவட்ட பொறுப்பாளர் ஆனாஸ், வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், வானவன்மாதேவி மீனர கிராம பஞ்சாயத்தார்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். #Kamalhassan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்