search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - கூண்டு வைத்தும் பலனில்லை
    X

    வாணியம்பாடி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - கூண்டு வைத்தும் பலனில்லை

    வாணியம்பாடி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். #Leopard

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கணாங்குப்பம் அருகே உள்ள நாகலேரி வட்ட பகுதியில் கடந்த 28-ந் தேதி சிறுத்தை புகுந்தது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியது.

    கரும்புத்தோட்டத்துக்கு சென்ற பொதுமக்கள் 3 பேரை சிறுத்தை திடீரென பாய்ந்து தாக்கியது.

    சிறுத்தை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். சிலர் சிறுத்தைப்புலி இருந்த பகுதியை நோக்கி கல்வீசினர். இதனால் கோபம் கொண்ட சிறுத்தை மக்கள் கூடி இருந்த கூட்டத்தில் புகுந்து தாக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் உயிர் தப்பினால் போதும் என கருதி நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் சிறுத்தை அவர்களை துரத்தி மேலும் 3 பேரை தாக்கியது.

    சிறுத்தையை பிடிக்க 3 கூண்டுகள் கொண்டு வரப்பட்டது. அதில் மாட்டு இறைச்சி, கோழி, நாய் ஆகியவற்றை அடைத்து ஏரி பகுதியில் வைத்துள்ளனர். சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க வண்டலூர், ஓசூரில் இருந்து மயக்க மருந்து நிபுணர்கள் வரவழைக்கபட்டனர்.

    வனத்துறையினர் மயக்க ஊசியுடன் சிறுத்தையை தேடினர். ஆனால் சிறுத்தை சிக்கவில்லை.

    சிறுத்தை அங்கிருந்து தப்பி காட்டுக்குள் சென்றது. இந்த நிலையில் சிக்கனாங்குப்பம் அருகே உள்ள அரப்பாண்ட குப்பம் கிராமத்திற்குள் நேற்று இரவு சிறுத்தை புகுந்தது. ரவி என்பவர் மாட்டு கொட்டகை அருகே வந்தது. அதனை கண்டதும் மாடுகள் சத்தமிட்டன. பொதுமக்கள் தீப்பந்தங்கள் கொளுத்தி சிறுத்தையை விரட்டினர். அவர்கள் விடிய விடிய தூங்காமல் கண்காணித்தனர்.

    அங்கிருந்து ஓடிய சிறுத்தை ராஜாமணிவட்டம் கிராமத்திற்கு சென்று முருகன் என்பவரது கன்றுகுட்டியை தாக்கியது. சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அதனை விரட்டியடித்தனர். கன்றுகுட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    Next Story
    ×