search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 4 நாளில் 3 அடி சரிவு

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 7 மாதங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 1,164 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1,029 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 12 ஆயிரத்து 500 கனஅடியும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 13-ந் தேதி 101.25 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 99.2 அடியாக இருந்தது. இன்று மேலும் சரிந்து 98.37 அடியானது. இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் 3 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது. #MetturDam
    Next Story
    ×