search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நல்லதங்காள் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் முழ்கி தண்ணீர் சென்ற காட்சி.
    X
    நல்லதங்காள் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் முழ்கி தண்ணீர் சென்ற காட்சி.

    பழனியில் வேகமாக நிரம்பும் அணைகள் - நல்லதங்காள் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு

    தொடர் மழையால் பழனியில் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பெய்த மழையினால் நல்லதங்காள் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. #Nallathangalodai
    பழனி:

    தொடர் மழையால் பழனியில் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பெய்த மழையினால் நல்லதங்காள் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


    கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் கொடைக்கானல் நகரில் உள்ள நீர் நிலைகள் மட்டுமின்றி பழனி நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்தது.

    முதலில் வரதமா நதி அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதனையடுத்து பாலாறு-பொருந்தலாறு அணை முழு கொள்ளளவை எட்டி வருவதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    மேலும் கோடை கால நீர் தேக்கம், குதிரையாறு அணைகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பழனி மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாய பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    பழனியை அடுத்துள்ள கோம்பை பட்டி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பெய்த மழையினால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள நல்லதங்காள் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    காட்டாற்று வெள்ளம் தரைபாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. பல வருடங்களுக்கு பிறகு இப்பகுதியில் வெள்ளம் வந்ததை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர். பாலத்தை கடந்த செல்பவர்கள் எச்சரிக்கையுடன செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

    இரவு முழுவதும் நீடித்த மழை காலையில் ஓய்ந்தது. அதன் பிறகே வெள்ளப்பெருக்கும் குறையத் தொடங்கியது. தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மீண்டும் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தரைப்பாலம் சேதமடையும் அபாயம் உள்ளது.

    எனவே இப்பாலத்தை சீரமைத்து கரையை பலப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  #Nallathangalodai
     


    Next Story
    ×