search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழ்ப்பாக்கம் முதல் கோயம்பேடு வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 437 கேமராக்கள்
    X

    கீழ்ப்பாக்கம் முதல் கோயம்பேடு வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 437 கேமராக்கள்

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் சந்திப்பில் தொடங்கி கோயம்பேடு மேம்பாலம் வரையில் 10 கி.மீ. தூரத்தில் 437 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    சென்னை:

    சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கேமிராக்கள் பொருத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தங்களது பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி வருகிறார்கள்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மையமாக வைத்து குற்றங்களை குறைக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் பிடிபட்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர், போக்குவரத்து போலீஸ்காரர் தர்மன் என்பவரை மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே தள்ளி விட்ட இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனும் கேமரா பார்வையில் சிக்கினார். இப்படி கண்காணிப்பு கேமராக்கள் குற்றம் செய்யும் அனைவரையுமே காட்டி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் சந்திப்பில் தொடங்கி கோயம்பேடு மேம்பாலம் வரையில் 10 கி.மீ. தூரத்தில் 437 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


    இதனை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். இதில் 88 கேமராக்கள், போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    அண்ணா சாலை, ஆர்.கே. மடம் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் விரைவில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

    சென்னையில் 31 ஆயிரத்து 802 கடைகள் மற்றும் 15 ஆயிரத்து 345 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் வசதி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது பற்றி கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:-

    கேமராக்கள் மூலம் குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சென்னையில் 60 சதவீதம் அளவுக்கு கேமராக்கள் பொருத்தும் பணி முடிந்துள்ளது. போலீஸ் அதிகாரிகள் தவறு செய்யக் கூடாது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×