என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் நிவாரண நிதி செலுத்தப்படும்- நாராயணசாமி
Byமாலை மலர்26 Nov 2018 3:45 AM GMT (Updated: 26 Nov 2018 3:45 AM GMT)
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நிவாரண நிதி இன்று செலுத்தப்படும் என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார். #GajaCyclone #Narayanasamy
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் காரைக்காலில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்களுக்கு மழைக்கால நிதியாக ரூ.2,500 வழங்கப்படுகிறது. அத்துடன் சேர்த்து மேலும் ரூ.2,500 வழங்கப்படும். நிவாரண உதவியாக 9,500 விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், முழுமையாக பாதிக்கப்பட்ட 1,500 குடிசைகளுக்கு தலா ரூ.4,500 வழங்கப்படும். இந்த நிவாரண தொகை இன்று (திங்கட்கிழமை) பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். நான் டெல்லி சென்று உள்துறை செயலாளர், மத்திய மந்திரி அருண்ஜெட்லியிடம் புயல் நிவாரணத்துக்கு ரூ.187 கோடி கேட்டுள்ளேன். மத்தியக்குழு அறிக்கை அளித்தபின் வழங்குவதாக கூறியுள்ளனர்.
காரைக்காலில் புயல் பாதித்த பகுதிகளை மத்தியக்குழு இன்று பார்வையிடுகிறது. ஆய்வை முடித்து நாளை (செவ்வாய்க்கிழமை) புதுவை தலைமைச் செயலகத்தில் எங்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார். #GajaCyclone #Narayanasamy
புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் காரைக்காலில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்களுக்கு மழைக்கால நிதியாக ரூ.2,500 வழங்கப்படுகிறது. அத்துடன் சேர்த்து மேலும் ரூ.2,500 வழங்கப்படும். நிவாரண உதவியாக 9,500 விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், முழுமையாக பாதிக்கப்பட்ட 1,500 குடிசைகளுக்கு தலா ரூ.4,500 வழங்கப்படும். இந்த நிவாரண தொகை இன்று (திங்கட்கிழமை) பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். நான் டெல்லி சென்று உள்துறை செயலாளர், மத்திய மந்திரி அருண்ஜெட்லியிடம் புயல் நிவாரணத்துக்கு ரூ.187 கோடி கேட்டுள்ளேன். மத்தியக்குழு அறிக்கை அளித்தபின் வழங்குவதாக கூறியுள்ளனர்.
காரைக்காலில் புயல் பாதித்த பகுதிகளை மத்தியக்குழு இன்று பார்வையிடுகிறது. ஆய்வை முடித்து நாளை (செவ்வாய்க்கிழமை) புதுவை தலைமைச் செயலகத்தில் எங்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார். #GajaCyclone #Narayanasamy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X