என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கஜா புயலால் பாதிப்பு- அமைச்சர் கடம்பூர் ராஜூ சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள்
Byமாலை மலர்23 Nov 2018 4:03 PM GMT (Updated: 23 Nov 2018 4:03 PM GMT)
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சார்பில் ரூ. 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.#Minister #KadamburRaju #Gaja
கோவில்பட்டி:
கஜா புயலால் நாகப்பட்டிணம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருள்களை அனுப்பி வருகின்றனர்.
இதையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ சார்பில் துணிகள், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பாய், போர்வை, பிஸ்கட், ரஸ்க், தண்ணீர் பாட்டில்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ. 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கோவில்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு இருந்து லாரி மூலம் நிவாரணப் பொருள்களுடன் சென்றது. இங்கிருந்து செல்லும் நிவாரண பொருள்கள் தஞ்சாவூர், பேராவூரணி பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்படுவுள்ளதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப் பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், ஜெமினி, சிறுபான்மையோர் பிரிவு திவான்பாட்ஷா, நிர்வாகிகள் போடுசாமி, பாலமுருகன், பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Minister #KadamburRaju
கஜா புயலால் நாகப்பட்டிணம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருள்களை அனுப்பி வருகின்றனர்.
இதையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ சார்பில் துணிகள், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பாய், போர்வை, பிஸ்கட், ரஸ்க், தண்ணீர் பாட்டில்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ. 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கோவில்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு இருந்து லாரி மூலம் நிவாரணப் பொருள்களுடன் சென்றது. இங்கிருந்து செல்லும் நிவாரண பொருள்கள் தஞ்சாவூர், பேராவூரணி பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்படுவுள்ளதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப் பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், ஜெமினி, சிறுபான்மையோர் பிரிவு திவான்பாட்ஷா, நிர்வாகிகள் போடுசாமி, பாலமுருகன், பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Minister #KadamburRaju
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X