search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் 112 வயது மூதாட்டி உயிரிழப்பு
    X

    கிருஷ்ணகிரியில் 112 வயது மூதாட்டி உயிரிழப்பு

    கிருஷ்ணகிரியில் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டிருந்த 112 வயது மூதாட்டி உயிரிழந்தார். அவருக்கு பேரன், பேத்திகள், உறவினர்கள் உட்பட அப்பகுதி பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் உள்ள செந்தில் நகரில் வசித்து வந்தவர் முனுசாமி. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த முனுசாமி கடந்த 1947-ம் ஆண்டு இறந்து விட்டார். 

    இவரது மனைவி லட்சுமியம்மாள் (வயது112). இவரது ஒரே மகன் தன்ராஜ். மருமகள் சரோஜா (96). இவர்களுக்கு 5 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த மே மாத ம் 112-வது பிறந்தநாளை, தனது 74 பேரன், பேத்திகளுடன் கொண்டாடினர். 

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டிருந்த லட்சுமியம்மாள் நேற்று உயிரிழந்தார். அவருக்கு பேரன், பேத்திகள், உறவினர்கள் உட்பட அப்பகுதி பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

    லட்சுமியம்மாள், சைவம் உணவு மட்டுமே உண்டு, சத்தான காய்கறிகள், கீரைகள், சிறு தானிய உணவுகள் மட்டுமே சாப்பிட்டு வந்து 112 வயது வரை வாழ்ந்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
    Next Story
    ×