search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையிலும் வருகிற 5-ந்தேதி அரசு விடுமுறை
    X

    புதுவையிலும் வருகிற 5-ந்தேதி அரசு விடுமுறை

    புதுவை அரசு வருகிற 5-ந் தேதி விடுமுறை அறிவித்த நிலையில் அங்கு பணியாற்றும் வெளிமாநில, மாவட்ட அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Diwali #PondicherryGovernment
    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வோர் கூடுதலாக விடுமுறை எடுத்து கொள்ளும் வகையில் வருகிற 5-ந் தேதியும் விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.



    இதனால் வெளி மாவட்டங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அமைந்தது.

    இதே போல் புதுவையிலும் வருகிற 5-ந் தேதி விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் புதுவை யூனியன் பிரதேசம் இருப்பதால் நவம்பர் 5-ந் தேதி விடுமுறை அளிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் புதுவை அரசின் சார்பு செயலர் வெர்பினா ஜெயராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில், புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் நவம்பர் 5-ந் தேதி விடுமுறை தினமாக அறிவிக்க புதுவை கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார். இதற்கு பதிலாக டிசம்பர் 1-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும்.

    இது, புதுவை, காரைக்கால் பிராந்தியங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவித்து உள்ளார்.

    புதுவை அரசு வருகிற 5-ந் தேதி விடுமுறை அறிவித்த நிலையில் புதுவையில் பணியாற்றும் வெளி மாநில, மாவட்ட அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Diwali #PondicherryGovernment

    Next Story
    ×