என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தம் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
Byமாலை மலர்1 Nov 2018 10:57 AM GMT (Updated: 1 Nov 2018 10:57 AM GMT)
குடியாத்தம் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வேலூர்:
குடியாத்தம் சாம்பரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 23) ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்டோவில் பயணி ஒருவரை ஏற்றிக் கொண்டு ஆம்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.
அழிஞ்சிகுப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 23). ராஜா (25). உதயவாணன் (22). தென்னரசு (23) ஆகிய 4 பேர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது சார்லஸ் ஓட்டிச் சென்ற ஆட்டோ அவர்கள் மீது லேசாக உரசியபடி நிற்காமல் சென்றுள்ளது.
சார்லஸ் ஆட்டோ பயணியை ஆம்பூரில் இறக்கி விட்டு குடியாத்தம் திரும்பிக் கொண்டிருந்தார். ஆட்டோ உரசியபடி சென்ற ஆத்திரத்தில் இருந்த 4 பேரும் ஆட்டோ அந்த வழியாக வந்ததை கண்டு வழிமறித்து சார்லசை உருட்டு கட்டைகளை கொண்டு சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த சார்லஸ் ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து மயங்கி விழுந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து மேல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன் இன்று அந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். குற்றவாளிகள் தினேஷ், ராஜா, உதயவாணன், தென்னரசு ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் அ.கோ. அண்ணாமலை வதாடினார்.
குடியாத்தம் சாம்பரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 23) ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்டோவில் பயணி ஒருவரை ஏற்றிக் கொண்டு ஆம்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.
அழிஞ்சிகுப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 23). ராஜா (25). உதயவாணன் (22). தென்னரசு (23) ஆகிய 4 பேர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது சார்லஸ் ஓட்டிச் சென்ற ஆட்டோ அவர்கள் மீது லேசாக உரசியபடி நிற்காமல் சென்றுள்ளது.
சார்லஸ் ஆட்டோ பயணியை ஆம்பூரில் இறக்கி விட்டு குடியாத்தம் திரும்பிக் கொண்டிருந்தார். ஆட்டோ உரசியபடி சென்ற ஆத்திரத்தில் இருந்த 4 பேரும் ஆட்டோ அந்த வழியாக வந்ததை கண்டு வழிமறித்து சார்லசை உருட்டு கட்டைகளை கொண்டு சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த சார்லஸ் ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து மயங்கி விழுந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து மேல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன் இன்று அந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். குற்றவாளிகள் தினேஷ், ராஜா, உதயவாணன், தென்னரசு ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் அ.கோ. அண்ணாமலை வதாடினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X