search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்வு

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று 103.37 அடியாக உயர்ந்தது. #MetturDam
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

    நேற்று 7 ஆயிரத்து 28 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 7 ஆயிரத்து 87 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 1000 கன அடியும், கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.01 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் அதிகரித்து 103.37 அடியாக உயர்ந்தது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 7 ஆயிரத்து 400 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 9 ஆயிரத்து 400 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்தும், உற்சாகமாக படகு சவாரி சென்றும் மகிழ்ந்து வருகிறார்கள். #MetturDam
    Next Story
    ×