search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம்-சென்னைக்கு இன்று முதல் புதிய பயணிகள் ரெயில்
    X

    காஞ்சீபுரம்-சென்னைக்கு இன்று முதல் புதிய பயணிகள் ரெயில்

    தென்னக ரெயில்வே காஞ்சீபுரம்- சென்னை கடற்கரை இடையே புதிய ரெயில் விட ஒப்புதல் அளித்தது. அதன்படி இன்று காலை முதல் புதிய ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு பணி நிமித்தமாகவும், தொழில் நிமித்தமாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் சென்று வருகிறார்கள்.

    காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு புதிய ரெயில் வண்டிகளை கூடுதலாக இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கூடுதல் ரெயில் சேவை குறித்து காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அவர் தென்னக ரெயில்வே உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து காஞ்சீபுரம் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய ரெயில்களை இயக்க கோரிக்கை விடுத்து வந்தார்.

    இந்த நிலையில் தென்னக ரெயில்வே காஞ்சீபுரம்- சென்னை கடற்கரை இடையே புதிய ரெயில் விட ஒப்புதல் அளித்தது. இன்று காலை முதல் புதிய ரெயில் சேவை தொடங்கப்பட்டது. காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். காஞ்சீபுரத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரை இந்த ரெயில் செல்கிறது.

    இதே போல சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.40-க்கு புறப்பட்டு காஞ்சீபுரம் ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×