என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் காட்டில் விலங்குகளை வேட்டையாடிய 4 பேர் கைது
    X

    சத்தியமங்கலம் காட்டில் விலங்குகளை வேட்டையாடிய 4 பேர் கைது

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் பவானிசாகர் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

    அப்போது வனப்பகுதியில் 4 நபர்கள் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்ததை கண்டனர். வனத்துறையினரை கண்ட 4பேரும் துப்பாக்கியுடன் தப்பியோட முயற்சித்தனர். ஆனால் வனத்துறையினர் விரட்டி பிடித்தனர். பவானிசாகர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

    பிறகு அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கோபி கரட்டடிபாளையத்தை சேர்ந்த பிரபு(32), நல்லகவுண்டம் பாளையம் காஜாமைதீன், மொடச்சூரை சேர்ந்த பழனிச்சாமி(50), மில்மேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார்(53) என்பது தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு பவானிசாகர் வனச்சரகர் ஜான்சன் தலைமையில் வனத்துறையினர் 4 பேரையும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண்லால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக 4 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து வசூலிக்க துணை இயக்குநர் உத்தரவிட்டார்.
    Next Story
    ×