என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் செய்யாத்துரை வீட்டில் வருமான வரித்துறை மீண்டும் சோதனை
    X

    நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் செய்யாத்துரை வீட்டில் வருமான வரித்துறை மீண்டும் சோதனை

    நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் செய்யாத்துரை வீட்டில் வருமான வரித்துறை மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. #ITRaid #SPK

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி ஆனந்தபுரி நகரைச் சேர்ந்தவர் செய்யாத்துரை. நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டரான இவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதே நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழமுடி மன்னார்கோட்டையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனையின் போது ஏராளமான நகைகள், கட்டுக்கட்டாக பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது. இவை அனைத்தும் செய்யாத்துரையின் வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று செய்யாத்துரை வீட்டுக்கு வந்தனர். சீல் வைக்கப்பட்ட அறையை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதிகாரிகள் வந்ததும் செய்யாத்துரை வீட்டின் வெளிக்கதவு பூட்டப்பட்டது. உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. #ITRaid #SPK

    Next Story
    ×