search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வில் சேர்க்க மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்- மு.க.அழகிரி திடீர் மிரட்டல்
    X

    தி.மு.க.வில் சேர்க்க மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்- மு.க.அழகிரி திடீர் மிரட்டல்

    கட்சியில் என்னை சேர்க்காவிட்டால் அதற்கான பின்விளைவுகளை தி.மு.க. சந்திக்க வேண்டியது இருக்கும் என்று மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். #DMK #MKAzhagiri #MKStalin
    மதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி போர்க்கொடி உயர்த்தி வருகிறார். மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

    வருகிற 5-ந்தேதி தனது ஆதரவாளர்களை திரட்டி சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி செல்லப்போவதாகவும் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

    அதற்கான வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக மதுரையில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே ஆதரவாளர்களிடம் பேரணியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    நேற்று நிருபர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் வந்தால் வேட்பு மனுதாக்கல் செய்வோம் என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இன்றும் மு.க.அழகிரி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்சி தொண்டர்களின் விருப்பத்தின் பேரிலேயே சென்னையில் 5-ந்தேதி மெரினா நோக்கி பேரணி செல்கிறோம். கருணாநிதி இல்லை என்பதால்தான் தி.மு.க.வை காப்பாற்ற களம் இறங்கி உள்ளோம்.


    தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால் அதற்கான பின்விளைவுகளை அந்த கட்சி சந்திக்க வேண்டியது இருக்கும் என்றார்.

    அப்போது நிருபர்கள், 5-ந்தேதி பேரணியில் தி.மு.க. தலைவர்கள் யாராவது பங்கேற்க உள்ளார்களா? என கேள்வி எழுப்பினர். யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என மு.க.அழகிரி தெரிவித்தார். #DMK #MKAzhagiri #MKStalin
    Next Story
    ×