search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றாலம் அருகே மாணவிக்கு முத்தம் கொடுத்த மாணவர் கைது
    X

    குற்றாலம் அருகே மாணவிக்கு முத்தம் கொடுத்த மாணவர் கைது

    குற்றாலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு முத்தம் கொடுத்த மாணவர் கைது செய்யப்பட்டார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள மத்தளம்பாறையை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ரமேஷ் கண்ணன் (வயது19). இவர் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டருகே 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். 

    மாணவியின் தந்தை ஒரு கொலை வழக்கில் கைதாகி பாளை ஜெயிலில் இருக்கிறார். இதனால் மாணவி தனது சித்தப்பா வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மாணவி வீட்டில் தனியாக இருந்த போது ரமேஷ் கண்ணன் உள்ளே நுழைந்து மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.

    அப்போது அங்கு மாணவியின் சித்தப்பா வந்ததால் ரமேஷ் கண்ணன், அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து மாணவியின் சித்தப்பா குற்றாலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் கண்ணனை கைது செய்தனர்.
    Next Story
    ×