என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்27 July 2018 9:36 AM GMT (Updated: 27 July 2018 9:36 AM GMT)
மதுரையில் சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மாநில அரசை கண்டித்து கோஷமிட்டனர். #DMKprotest
மதுரை:
அண்மையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை 100 சதவீதமாக உயர்த்தியது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் அம்பிகா தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச்செயலாளர் தளபதி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி, மாநில மருத்துவரணி துணைத்தலைவரும், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினருமான டாக்டர் சரவணன்.
நிர்வாகிகள் ஜெயராமன், அக்ரி.கணேசன், எஸ்ஸார் கோபி, மின்னல்கொடி, சின்னம்மாள், பொன்சேது மற்றும் தொண்டர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மாநில அரசை கண்டித்து கோஷமிட்டனர். #DMKprotest
அண்மையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை 100 சதவீதமாக உயர்த்தியது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் அம்பிகா தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச்செயலாளர் தளபதி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி, மாநில மருத்துவரணி துணைத்தலைவரும், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினருமான டாக்டர் சரவணன்.
நிர்வாகிகள் ஜெயராமன், அக்ரி.கணேசன், எஸ்ஸார் கோபி, மின்னல்கொடி, சின்னம்மாள், பொன்சேது மற்றும் தொண்டர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மாநில அரசை கண்டித்து கோஷமிட்டனர். #DMKprotest
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X