என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
லாரி ஸ்டிரைக்கிற்கு ஆதரவாக சென்னையில் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம்
திருவொற்றியூர்:
டீசல் விலை உயர்வு, மூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.
இந்த வேலை நிறுத்தத்திற்கு கண்டெய்னர் மற்றும் டிரைலர்ஸ் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்றுமதி, இறக்குமதிக்காக சென்னை துறைமுகம் செல்லும் 2 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.
இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது என்றும் இதனால் மாதவரம் மஞ்சம்பாக்கம் முதல் காசிமேடு ஜீரோ கேட் வரை 2000 ஆயிரத்திற்கு மேற்பட்ட லாரிகள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பொன்னேரி மீஞ்சூர் மஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கண்டெய்னர் சோதனை மையத்தில் இருந்து ஏற்றுமதி இறக்குமதிக்காக தினமும் சென்னை துறைமுகத்திற்கு 2000 ஆயிரம் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களும் குளிரூட்ட பட்ட கண்டெய்னர் லாரிகள் மூலம் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டு கப்பல்கள் மூலம் வெளியூர்களுக்கு அனுப்பபடுவதால் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் உணவு பொருட்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே வாடகை உயர்வு குறித்து கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முழு அளவு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்படுவதால் அன்று மாலையே சமரசம் என்ற பெயரில் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருகிறார்களே தவிர இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்ற படாமலே இருக்கிறது. 8-வது நாளாக தொடரும் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #LorryStrike #vegetables
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்