என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உயர் அதிகாரி திட்டியதால் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ஜினீயர் தற்கொலை
Byமாலை மலர்25 July 2018 6:51 AM GMT (Updated: 25 July 2018 6:51 AM GMT)
திருவெண்ணைநல்லூர் அருகே சக ஊழியர்கள் முன்னிலையில் உயர் அதிகாரி திட்டியதால் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பெரிய செவலை பகுதியில் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.
இந்த சர்க்கரை ஆலையில் உதவி என்ஜினீயராக சரவணன் (வயது 40) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் ஆலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தார்.
இன்று காலை சர்க்கரை ஆலையில் சரவணன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த உயர் அதிகாரி ஒருவர் சக ஊழியர்கள் முன்னிலையில் என்ஜீனியர் சரவணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த சரவணன் உடனே அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றார். பின்னர் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சரவணண் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரவணன் தற்கொலை செய்வதற்கு காரணமான உயர் அதிகாரியை கண்டித்து சர்க்கரை ஆலை ஊழியர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் பணியை புறக்கணித்தனர். மேலும் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் சர்க்கரை ஆலை வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பெரிய செவலை பகுதியில் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.
இந்த சர்க்கரை ஆலையில் உதவி என்ஜினீயராக சரவணன் (வயது 40) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் ஆலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தார்.
இன்று காலை சர்க்கரை ஆலையில் சரவணன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த உயர் அதிகாரி ஒருவர் சக ஊழியர்கள் முன்னிலையில் என்ஜீனியர் சரவணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த சரவணன் உடனே அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றார். பின்னர் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சரவணண் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரவணன் தற்கொலை செய்வதற்கு காரணமான உயர் அதிகாரியை கண்டித்து சர்க்கரை ஆலை ஊழியர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் பணியை புறக்கணித்தனர். மேலும் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் சர்க்கரை ஆலை வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X