என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
300 ஆண்டுகள் பழமையான ஆலமரத்துக்கு இறுதி சடங்கு நடத்திய கோவை மக்கள்
Byமாலை மலர்24 July 2018 8:40 AM GMT (Updated: 24 July 2018 8:40 AM GMT)
கோவை தொண்டாமுத்தூரில் சூறாவளிக்காற்றில் 300 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்ததால் அம்மரத்திற்கு பொதுமக்கள் இறுதி சடங்கு நடத்தினர்.
வடவள்ளி:
கோவை தொண்டாமுத்தூர் இக்கரைபோளுவாம்பட்டி செல்லும் வழியில் உள்ளது புத்தூர். இங்கு 300 வருட பழமையான ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தின் அடியில் பஸ் நிறுத்தம், கடை, மேடை உள்ளது. இதனை அங்குள்ள பொதுமக்கள் ஊரின் நினைவு சின்னமாக கூறி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. பலத்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கடந்த ஞாயிறு இரவு 7 மணிக்கு ஆலமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஊர்ப்பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து விழுந்து கிடந்த மரத்தை பார்த்து கதறி அழுதனர். மரத்தை வெட்டி அகற்ற 2 நாட்கள் ஆனது.
300 ஆண்டுகளாக தங்களோடு தங்கள் மூதாதையர்களோடும் வாழ்ந்த மரத்திற்கு இறுதி சடங்கு நடத்தினர். கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அந்த பகுதி முழுவதும் ஒட்டினர். வெளியூரில் இருந்து வந்தவர்கள் இதனை பார்த்து நெகிழ்ந்தனர்.
கோவை தொண்டாமுத்தூர் இக்கரைபோளுவாம்பட்டி செல்லும் வழியில் உள்ளது புத்தூர். இங்கு 300 வருட பழமையான ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தின் அடியில் பஸ் நிறுத்தம், கடை, மேடை உள்ளது. இதனை அங்குள்ள பொதுமக்கள் ஊரின் நினைவு சின்னமாக கூறி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. பலத்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கடந்த ஞாயிறு இரவு 7 மணிக்கு ஆலமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஊர்ப்பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து விழுந்து கிடந்த மரத்தை பார்த்து கதறி அழுதனர். மரத்தை வெட்டி அகற்ற 2 நாட்கள் ஆனது.
300 ஆண்டுகளாக தங்களோடு தங்கள் மூதாதையர்களோடும் வாழ்ந்த மரத்திற்கு இறுதி சடங்கு நடத்தினர். கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அந்த பகுதி முழுவதும் ஒட்டினர். வெளியூரில் இருந்து வந்தவர்கள் இதனை பார்த்து நெகிழ்ந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X