search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரியில் மழை நீடிப்பு - பெருஞ்சாணி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு
    X

    குமரியில் மழை நீடிப்பு - பெருஞ்சாணி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு

    பெருஞ்சாணி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் இன்று காலை மீண்டும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. #PerunchaniDam
    நாகர்கோவில்:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

    பூதப்பாண்டி, சுருளோடு, நாகர்கோவில், கோழிப்போர் விளை மற்றும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் நேற்றிரவும் மழை பெய்தது. மாம்பழத்துறையாறில் அதிகபட்சமாக 20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 1 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 17.50 அடியாக இருந்தது. அணைக்கு 712 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதால் அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய நீரின் அளவுக்கேற்ப தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இன்று காலை அணையின் நீர்மட்டம் 75.55 அடி யாக இருந்தது. அணைக்கு 536 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 101 கனஅடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

    ஏற்கனவே குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. தற்போது பெருஞ்சாணி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் இன்று காலை மீண்டும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகள் 15 அடியை எட்டுகிறது. மாம்பழத்துறையாறு முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    மாவட்டம் முழுவதும் நேற்றும் சூறைக்காற்று வீசியது. ராஜாக்கமங்கலம் பகுதியில் ராட்சத மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் நின்ற மின்கம்பங்களும் சேதமடைந்து மின்சாரமும் தடைபட்டது. மின்வாரிய அதிகாரிகள் மரத்தின் கிளைகளை வெட்டி மின் இணைப்பை சரி செய்தனர்.

    சூறைக்காற்றிற்கு மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாழைகளும் முறிந்து விழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-10.2, பெருஞ்சாணி-9.8, சிற்றாறு-1-11.6, சிற்றாறு-2-9, மாம்பழத்துறையாறு-20, பூதப்பாண்டி-2.6, சுருளோடு-11.4, பாலமோர்-8.4, கோழிப்போர் விளை-7, புத்தன்அணை-10.2, திற்பரப்பு-8. #PerunchaniDam

    Next Story
    ×