search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேஸ்புக் பழக்கத்தில் காதலிப்பதாக கூறி உல்லாசம்- காதலன் கைது
    X

    பேஸ்புக் பழக்கத்தில் காதலிப்பதாக கூறி உல்லாசம்- காதலன் கைது

    பேஸ்புக் மூலம் காதலிப்பதாக கூறி பட்டதாரி பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வள்ளியூர்:

    சமூக வலைதளங்களால் எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவுக்கு தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலமாக பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் சில இளைஞர்கள் அவர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்றுவிடுகிறார்கள். இதனால் அந்த பெண்களின் வாழ்க்கை திசைமாறி சீரழிந்துவிடுகிறது.

    இவ்வாறு பேஸ்புக் மூலம் மலர்ந்த நட்பினால் ஒரு பட்டதாரி பெண் நண்பர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும், நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் நம்பி மகன் சுரேஷ் (வயது 22) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தங்களை பற்றிய விவரங்களை பகிர்ந்துகொண்டார்கள்.

    நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. உன்னை தனிமையில் சந்திக்கவேண்டும் என்று சுரேஷ் தனது ஆசையை அந்தபெண்ணிடம் வெளிப்படுத்தினான். அவளும் காதலன் அழைத்ததால் மறுக்காமல் நேரில் சந்தித்தாள். இருவரும் பல இடங்களுக்கு சென்று காதலை வளர்த்தனர்.

    ஒரு சந்தர்ப்பத்தில் சுரேஷ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காவல்கிணற்றில் உள்ள ஒரு விடுதியில் சுரேஷ் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வேளையில் சுரேஷ் காதலியை பல கோணங்களில் படம் எடுத்தார். இருவரும் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டார்கள். சுரேஷ் எப்படியும் நம்மை திருமணம் செய்வான் என எண்ணி அந்த பெண் முழுமையாக நம்பி போட்டோக்கள் எடுத்துக்கொண்டாள்.

    இந்த நிலையில் சுரேசுக்கு விபரீத எண்ணம் உண்டானது. ஊருக்கு சென்று நடந்த விவரத்தை தனது நண்பன் அரிகரசுதனிடம் கூறினான். காதலியோடு எடுத்த போட்டோக்களையும் காண்பித்தான். உடனே அரிகரசுதனுக்கு சுரேசின் காதலியை சந்திக்க விரும்பினான். காதலியின் நண்பன் தானே என்று அந்த பெண், அரிகரசுதனிடமும் அன்பாக பழகினாள். ஒரு சந்தர்ப்பத்தில் சுரேசும், அரிகரசுதனும் சேர்ந்து அந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுக்க தொடங்கினர்.

    மேலும் சுரேஷ், அரிக‌ரசுதன் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணிடம் தங்களுக்கு ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அந்த பட்டதாரி பெண் பணகுடி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சுரேசையும், அரிகரசுதனையும் மடக்கி பிடிக்க திட்டமிட்டனர். இதையடுத்து அந்த பெண் மூலமாக அவர்களை காவல்கிணறு சந்திப்புக்கு வர செய்தனர். பணம் பெறுதற்காக சுரேஷ், அரிகரசுதன் ஆகியோர் வந்தனர். அவர்கள் இருவரையும் அங்கு நின்ற பணகுடி போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    இந்த‌ சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை சுரேசும், அரிகரசுதனும் வேறு நண்பர்களுக்கும் கொடுத்துள்ளனர். அவர்களும் அந்த பெண்ணுக்கு போனில் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்கள். இதையடுத்து அவர்களையும் போலீசார் மடக்கி பிடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

    இதற்காக அந்த பெண்ணின் செல்போனில் பதிவான எண்களையும், சுரேஷ் போனில் இருந்த போட்டோக்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சுரேஷ் இதுபோல வேறு பெண்களுடன் பழகியுள்ளாரா? சுரேசால் வேறு யாரும் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
    Next Story
    ×