என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஊர்கூடி தேர் இழுத்ததால் மதுரைக்கு எய்ம்ஸ் வந்தது: செல்லூர் ராஜூ பேட்டி
திருப்பரங்குன்றம்:
திருநகர் அருகே விளாச்சேரியில் இன்று நடந்த பரிதிமாற் கலைஞரின் 148-வது பிறந்த நாள் விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எய்ம்ஸ் மருத்துவமனையை யார் கொண்டு வந்தாலும் மதுரைக்கு வந்தது சந்தோஷம் தான். ஊர் கூடி தேர் இழுத்ததால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது.
இந்தியா முழுவதும் பா.ஜ.க. ஆட்சி செய்வதால் தமிழிசை சவுந்தரராஜன் எய்ம்ஸை கொண்டு வந்தது பா.ஜ.க.தான் என்று சொல்வதில் தவறில்லை. அதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எய்ம்ஸை கொண்டு வந்ததில் தமிழக முதல்வருக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் பங்கு உண்டு. பா.ஜ.க. மட்டும் கொண்டு வந்தது என்றால் 2003-ம் ஆண்டே கொண்டு வந்திருக்கலாமே? எய்ம்ஸ் தற்போது வந்ததற்கு தமிழக அரசின் முயற்சியே காரணம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார். #maduraiaiims
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்